Thursday, December 31, 2009

விடைகொடுப்போம் 2009, வரவேற்போம் 2010

2009-ம் ஆண்டு என்னை பொறுத்த வரை எனக்கு மிக மோசமாகவே தொடங்கியது. காரணம் சத்யம் - இந்திய பங்குச்சந்தையை திருப்பி போட்ட, எளிதில் யாரும் மறக்கமுடியாத எட்டாயிரம் கோடி ஊழல் விவகாரம். ஊழல் வெளியான நாளன்று (ஜனவரி 7ம் தேதி) நாங்கள் அலுவலகத்தில் இருந்த போது எங்களுக்கு அதன் தாக்கம் தெரியவில்லை அல்லது புரியவில்லை. நானும் நண்பர்களும் ஏதோ ஊழல் விவகாரம் போல என்று வழக்கம் போல பேசி விட்டு கலைந்து விட்டோம். மாலை வீடு வந்து சேர்ந்து தொலைக்காட்சியை பார்த்த பிறகு தான் அதன் வீரியம் புரிந்தது. எந்த செய்தி சேனலை திருப்பினாலும் நான்கு பேர் அமர்ந்து கொண்டு இந்த ஊழல் விவகாரத்தையே பேசிக்கொண்டு இருந்தார்கள்.

சும்மாவே எனக்கெல்லாம் தூக்கம் வராது, இந்த ஊழல் செய்தியை கேட்டு & பார்த்த பிறகு தூக்கமேயில்லை. மறுநாள் வேளைக்கு சென்றால் நமக்கு அங்கு வேலை இருக்கும்மா, நம்மை உள்ளே விடுவார்களா என்று சந்தேகம் வேறு.

அதை விட கொடுமை அன்று இரவு, இரண்டு மூன்று வருடம் என்னிடம் தொடர்பில்லாத நண்பர்கள் எல்லாம் கைபேசியில் துக்கம் விசாரித்தது தான். அலுவகத்தில் என்ன பேசி கொள்கிறார்கள் அல்லது சொன்னார்கள், உனக்கு சம்பளம் வருமா என்று ஏகப்பட்ட கேள்வி வேறு. அதுவும் சொல்லிவைத்தது போல அனைவரும் ஒரே கேள்வியை கேட்க எனக்கு தலையே வெடித்துவிடும் போல இருந்தது. அன்றைய இரவு அப்படியாக கழிந்தது.

அப்படி தொடங்கிய இந்த வருடம் ஆண்டிறுதியில் ஆசுவாசம் வழங்கியிருக்கிறது (என்னடா ஜனவரியில் தொடங்கியவன் திடிரென்று டிசம்பருக்கு வந்துவிட்டான் என்று நினைக்காதிர்கள், என்னை பாதித்த சம்பவத்தை மட்டுமே இங்கே பகிர்ந்து இருக்கிறேன். மற்றவை அடுத்த வருடத்தில்).

விடைகொடுப்போம் 2009 க்கு, வரவேற்போம் 2010 யை.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

2 comments:

  1. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் அருண்

    ReplyDelete
  2. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    ReplyDelete