Wednesday, April 14, 2010

ஐ.பி.எல், கேப்டன் மற்றும் பையா

ஐ.பி.எல்:


கடந்த இரண்டு வருடத்தில் இல்லாத சிறப்பு இந்த ஐ.பி.எல் லுக்கு இருக்கிறது. இறுதியாட்டத்துக்கு ஒரு வார காலமே இருக்கும் நிலையில் இதுவரை ஒரு அணியை தவிர மற்றவை எல்லாம் இன்னும் அடுத்த கட்டத்துக்கு செல்லவில்லை. எனக்கென்னவோ சூதாடிகளிடம் இந்த போட்டிகள் சிக்கி விட்டனோவோ என்று தோன்றுகிறது. நமக்கு எதுக்கு அந்த அரசியல் எல்லாம்.

இதுவரை நடந்து போட்டிகளை வைத்து பார்க்கும் பொழுது மும்பை, சென்னை, பெங்களூர், டெல்லி அணிகள் அரையிருதிக்கு செல்லும் வாய்ப்புகள் அதிகம். ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகள் அதிகம் போராடினால் தான் அடுத்த கட்டத்துக்கு செல்லமுடியும். மிதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால்தான் அவர்களுக்கு அரையிருதி வாய்ப்பு கிட்டும்.

பொறுத்தது பொறுத்தோம் இன்னும் ஒரு வார காலம் பொறுக்க மாட்டோமோ...பார்ப்போம் இம்முறை இந்திய கேப்டன் வெல்கிறாரா அல்லது வெளிநாட்டு கேப்டன் வெல்கிறாரா..

கேப்டன் டிவி:


கேப்டனும் தொடங்கி விட்டார் தனக்கென்று ஒரு டிவியை. நாமெல்லாம் அவர் நடித்த (என்னது கேப்டன் நடித்தாரா என்று கேட்க கூடாது) படங்களை பார்த்திருந்தால் அவர் அரசியலுக்கு வந்து இருக்க மாட்டார். கெரகம் வந்துவிட்டார். தேர்தலில் அவர் கட்சி ஆட்களை கவுத்துவிட்டிர்கள். அவரும் எத்தனை நாட்களுக்கு தான் பொறுத்திருப்பார், அதான் பொங்கிவிட்டார் டிவி வடிவில். இனி தினமும் கேப்டன் படம் தாண்டி. பொழுதுபோக்குக்கு கியாரன்டீ (கேப்டன் படங்களை சொன்னேன்).

எனக்கு தான் கொடுத்து வைக்கவில்லை, வீட்டில் டிஷ் டிவி இருப்பதால் கேப்டன் டிவி வரவில்லை.

பையா:
லிங்குசாமி படத்தில் எதுவும் புதுசாக எதிர்பார்க்க முடியாது - எதிர்பார்க்கவும் கூடாது. அதையும் மீறி இந்த படத்தை பார்க்க தூண்டியது யுவனின் இசை மட்டுமே.

கார்த்திக்கு நடிக்க பெரியளவு வாய்ப்பில்லை, சும்மா தான் வருகிறார். தமன்னாவை பார்த்து கொண்டே இருக்கலாம் போல. இதில் வில்லன் வேறு. மிலிந்த் சோமன் காமெடிக்கு நன்றாக உதவியிருக்கிறார். படத்தை தாங்கி பிடிப்பது இசை மற்றும் எடிட்டிங் மட்டுமே. பல இடங்களை வெட்டியும் கொட்டாவி வருவதை தடுக்க முடியவில்லை. மொத்தத்தில் படத்தில் காட்டப்படும் சாலைகளில் இருந்த திருப்பம் கூட இந்த படத்தில் இல்லை.

அங்காடித் தெரு:
படத்தை பற்றி பலர் ஏற்கனவே எழுதிவிட்டார்கள். புதுமுகம் மகேஷ், அஞ்சலி, 'ப்ளாக்' பாண்டி, இயக்குனர் வெங்கடேஷ் அனைவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்தியிருக்கிறார்கள். ஜெயமோகனின் வசனங்கள் ரொம்பவே பளிச், ரசிக்க முடிகிறது. படம் சற்று நீளம். எடிட்டர் கொஞ்சம் தூங்கிவிட்டார் போல.

யதார்த்தமான படம் கொஞ்சம் மிகைப்படுத்தி எடுத்தியிருக்கிறார்கள் (ஆனால், ரசனையுடன்), கிளைமாக்ஸ் உட்பட.

குறிப்பு: நான் வேற என்னத்த கேட்க போறேன், பிடிச்சு இருந்த தமிலிஷிலேயும், தமிழ்மணத்திலேயும் குத்துங்க, இல்லைனா பின்னூட்டம் போடுங்க.

1 comment:

  1. பையா படத்துல ஒரு பெரிய திருப்பம் இருந்திச்சு பாக்கலியா நீங்க......ஆனா அங்க கார் திரும்பாம ஸ்ட்ரெயிட்டா போயிடிச்சு.

    ReplyDelete