Wednesday, December 16, 2009

முதல் இரண்டாவது பதிவு

அப்பாடா..ஒரு வேலை முடிந்தது என்று நினைக்கிறேன்...
நானும் கடந்த ஆறுமாத காலமாக ஒரு வலைப்பதிவு தொடங்க வேண்டும் என்று நினைத்து கொண்டு இருந்தேன். ஆனால் அதை எப்படி தொடங்குவது என்று எனக்கு தெரியவில்லை. ஒரு வேளை தொடங்கிவிட்டால் என்ன எழுதுவது என்று குழப்பம் வேறு. அதனால் அதுவரை மற்ற (யூத்) பதிவர்கள் என்ன எழுதுகிறார்கள் என்று கவனித்து கொண்டு இருந்தேன். அண்ணன் கார்க்கி பதிவுல நமக்கு கொஞ்சம் ஐடியா கிடைச்சது, அதாவது என்ன எழுதலாம்னு...அவ்வ்வ்வ்...
எப்படியும் வேட்டைக்காரன் படம் (ஏன் என்று கேட்க கூடாது) வருவதற்குள் (வராது என்று நினைத்திருந்தேன்) ஒரு வலைப்பதிவு ஆரம்பித்து விடவேண்டும் என்று நினைத்திருந்தேன்.
அப்படி எப்படி என்று இறுதியாக எனக்கென்று ஒரு வலைப்பதிவும் தொடங்கியாச்சு. முதல் பதிவு வேட்டைக்காரன் படம் விமர்சனம் ஆக இருந்தால் நல்ல இருக்கும் என்று   நினைத்திருந்தேன். ஆனால் முடியவில்லை. அந்த வாரம் ஒரு சுற்றுபயணம் செல்ல திட்டம் இருந்ததால் (கேட்டாலும் கேட்காவிட்டாலும் தனி பதிவாக வரும்), முதல் பதிவாக இந்த வலைப்பதிவு தொடங்கிய கதையை பதிகிறேன் (என்னமோடா மாதவா...நீயும் ஒரு பதிவு எழுத்திட்ட). 
இன்னும் எழுதவே ஆரம்பிக்கல அதுக்குள்ள நாக்க தள்ளுதூ...
கிறுக்கியது 16/Dec/2009, பதிவேற்றும் செய்தது 22/Dec/2009

No comments:

Post a Comment